மனைவிக்கு தெரியாமல் 2 -வது திருமணம் செய்த கணவர் கைது..!

கோவை துடியலூர் அசோகாபுரம் என். ஜி.ஜி.ஓ. காலனி, ரங்கம்மாள் காலனியை சேர்ந்தவர் கருப்புசாமி .இவரது மகள் ஜனரஞ்சனி ( வயது 30) இவருக்கும் குளத்துப்பாளையம் மாகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பத்ரன் (வயது 37 ) என்பவருக்கும் 9-9-2021 அன்று திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாகவும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாலும் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். இந்த நிலையில் மனைவியின் சம்மதம் இல்லாமல் கணவர் பத்ரன் வேறு ஒரு பெண்ணை 2 – வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜனரஞ்சனி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.இது தொடர்பாக கணவர் பத்ரன் நேற்று கைது செய்யப்பட்டார். கன்னியம்மாள் தந்தை ரங்கசாமி, காளியம்மாள் ரஞ்சிதா ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை உட்பட இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.