திருமண நடக்காத விரக்தியில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் முருகன் ( வயது 48 )இவர் கோவை காந்திபுரம் முதல் வீதியில் அறை எடுத்து தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர் . இவருக்கு திருமணம் ஆகவில்லை. தனக்கு இன்னும் திருமணம் முடியவில்லையே என்று அடிக்கடி மன வேதனைப்படுவாராம். இந்த நிலையில் நேற்று அவர் தங்கியிருந்த அறையில் மின்விசிறியில் லுங்கியை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது: இன்ஸ்பெக்டர் சிவக்குமார்,சப் இன்ஸ்பெக்டர் அஜித் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது..