கோவை ஓட்டல் அதிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு – வாலிபர் கைது..!

கோவை சரவணம்பட்டி, கே.ஜி.லே-அவுட், இந்திரா நகரை சேர்ந்தவர் ஆனந்த வெங்கடேசன் (வயது 39) ஓட்டல் தொழில் செய்து வருகிறார்.நேற்று இவர் அங்குள்ள மருதம் நகர் பிரிவில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆசாமி இவரிடம் பணம் கேட்டார் .இவர் கொடுக்க மறுத்தார். இதனால் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 1250 ரூபாயை கொள்ளையடித்து விட்டு அந்த சாமி தப்பி ஓடி விட்டார் .இது குறித்து ஆனந்த வெங்கடேசன் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணன் ,சப் இன்ஸ்பெக்டர்ரஜினிகாந்த் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பீளமேடு, காந்தி மாநகரை சேர்ந்த பரமசிவம் மகன் ஒர்க்ஷாப் மணிகண்டன் என்ற மணிகண்டன் (வயது 25 )என்பவரை கைது செய்தனர் .மேலும் விசாரணை நடந்து வருகிறது.