புகைபடத்தை காட்டி கல்லூரி மாணவிகளுக்கு கொலை மிரட்டல் – முன்னாள் காதலன் கைது.!!

கோவை குனியமுத்தூர்,திருமறை நகரை சேர்ந்தவர் ரஷீத் இவரது மகள் சிப்ரின் (வயது 21) அங்குள்ள கல்லூரியில் எம். ஏ. ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அவருடன் படித்து வரும் நாகர்கோவில் வைத்தியர் விளையைச் சேர்ந்த ஸ்ரீ தர்ஷன் (வயது 22) என்பவரை காதலித்து வந்தாராம்..ஸ்ரீ தர்ஷனின் நடத்தை சரியில்லாததால் அவருடன் பேசுவதை செப்ரின் நிறுத்திக் கொண்டார்.இந்த நிலையில் செப்ரின் நேற்று முன்தினம் இடையர்பாளையம் பிரிவு பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றார்.அப்போது அங்கு வந்த ஸ்ரீ தர்ஷன், செப்ரினை வழிமறித்து அவருடன் ஏற்கனவே எடுத்த புகைப்படங்களை மற்றவர்களிடம் காட்டி விடுவதாகவும், சமூக வலைதளங்களில் பரவ விடுவதாகவும் கூறி கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து செப் ரின் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் மாணவர்ஸ்ரீ தர்ஷன் மீது கொலை மிரட்டல் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இவர் இதே போலகோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வரும் தேனி மாவட்டம் அரண்மனை புதூரை சேர்ந்த சத்ய ஸ்ரீ ( வயது 19) என்ற மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை காட்டி, அவரிடம் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரவ விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.இது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..