ஒர்க் ஷாப் மேற்கூறையில் இருந்து தவறி விழுந்து மேலாளர் பரிதாப பலி..

கோவை கணபதி மணியக்காரன் பாளையம், பாலமுருகன் நகரை சேர்ந்தவர் யோகதாஸ் ( வயது 39) இவர் பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள ஒரு ஆட்டோ சர்வீஸ் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார் . கடந்த 16ஆம் தேதி அந்த நிறுவனத்தின் மேற்கூறையில் ஏறி சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது உயரமான பகுதியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது . சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பழனிக்காமல் நேற்று இறந்தார் .இது குறித்து அவரது மனைவி வெங்கடேஸ்வரி பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இது தொடர்பாக கண்ணன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.