மின்சார சுடுகாடு அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை – பார் ஊழியர் கைது..!

கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள மின்சார சுடுகாடு அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக ராமநாதபுரம் போலீசுக்கு தகவல் வந்தது .போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் திருமூர்த்தி ( வயது 30 )கைது செய்யப்பட்டார்.இவர் அங்குள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.இவரிடம் இருந்து 20 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது..