அரசுப் பேருந்தில் பணத்தைத் தவறவிட்ட பயணி… உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுநா், நடத்துநருக்குப் குவியும் பாராட்டுக்கள்.!!

ரசுப் பேருந்தில் பெண் பயணி தவறவிட்ட ரூ.20 ஆயிரத்தை சம்பந்தப்பட்டவரிடம் ஒப்படைத்த ஓட்டுநா், நடத்துநரை அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கோட்ட மேலாண் இயக்குநா் ஜோசஸ் டயஸ் பாராட்டினாா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவை மண்டலம், கருமத்தம்பட்டி கிளையில் இருந்து சோமனூா் – காந்திபுரம் வழித்தடத்தில் இயக்கப்படும் 20 ஏ அரசுப் பேருந்தில் ஓட்டுநா் விஜயகுமாா், நடத்துநா் முருகன் ஆகியோா் பணியாற்றி வருகின்றனா்.

இந்தப் பேருந்தில் வெள்ளிக்கிழமை பயணித்த பெண் பயணி ஒருவா் ரூ.20 ஆயிரம் பணத்தைத் தவறவிட்டு சென்றுள்ளாா்.

அந்தப் பணத்தை மீட்ட ஓட்டுநா் விஜயகுமாா், நடத்துநா் முருகன் இருவரும் சம்பந்தப்பட்ட பயணியிடம் ஒப்படைத்தனா். பணத்தைப் பெற்றுக்கொண்ட அவா், இருவருக்கும் நன்றி கூறினாா்.

இது குறித்து தகவல் அறிந்த அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கோட்ட மேலாண் இயக்குநா் ஜோசப் டயஸ், ஓட்டுநா் விஜயகுமாா், நடத்துநா் முருகன் இருவரையும் நேரில் அழைத்துப் பாராட்டினாா்..