அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது.!

கோவை மாவட்டம், நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 53) இவர் காரமடை பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் பாட்டு ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு பத்மநாபன் அதே பள்ளியில் படித்து வந்த 8 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது .இது குறித்து அந்த மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அதிகாரி உள்ளிட்டோருக்கு புகார் அளித்தனர். இதையடுத்து அவர்கள் கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி முருகானந்தத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதில் பாட்டு ஆசிரியர் பத்மநாபன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ( பொறுப்பு) சித்ரா வழக்கு பதிவு செய்து ஆசிரியர் பத்மநாபனை போக் சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அரசு பள்ளி மாணவிகளுக்கு பாட்டு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து கைதான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.