கோவை இன்ஜினியரிடம் ரூ.23 லட்சம் ஆன்லைன் மோசடி.!

கோவை கணபதி அருகே உள்ள சின்ன வேடம்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார் ( வயது 46) இன்ஜினியர் இவரது வாட்ஸ்- அப்புக்கு ஒரு தகவல் வந்தது. அதில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தரப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதை நம்பிய இன்ஜினியர் சசிகுமார் அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கு எண்ணிற்கு ஆன்லைன் மூலம் பல்வேறு தவணைகளில் ரூ. 23 லட்சம் அனுப்பி வைத்தார். இந்த பணத்துக்கு உரிய லாபம் வந்திருப்பதாக ஆன்லைன் மூலம் தகவல் தெரிவித்தனர். அந்த பணத்தைக் கேட்டபோது அவர்கள் செல்போன் “ஸ்விட்ச் ஆப்’ செய்யபட்டிருந்தது. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த சசிகுமார் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார. இன்ஸ்பெக்டர் அருண்,சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..