திருச்சியில் கார்கில் தினம் மேஜர் சரவணன் நினைவு ஸ்தூபியில் மரியாதை.

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக சாலையில் உள்ள திருச்சியைச் சேர்ந்த மேஜர் சரவணன் நினைவு ஸ்தோபையில் நேற்று மேஜர் சரவணன் உள்ளிட்ட கார்கில் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் என்சிசி குரூப் கமாண்டர் கர்னல் விஜயகுமார் நிர்வாக கமாண்டர் கர்ணன் சிஎம் சாரதி தமிழ்நாடு பட்டாலியன் கமாண்டின் ஆபிஸர் அருண்குமார் போக்குவரத்து போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் திருமலை ராஜன் மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் வட்டாட்சியர் அருள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து திருச்சி முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கத்தின் சார்பில் கேப்டன் ஞானசேகரன் கேப்டன் செந்தில் குமார் தலைமையில் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் மலர் வளையும் வைத்து மரியாதை செலுத்தினர் மாணவர் அமைப்பினர் என பலரும் பங்கேற்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.