போத்தனூர் வழியாக திருவனந்தபுரம் – பெங்களூரு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கம்.!!

கோவை ஜூலை 28 சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- வருகிற 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பகல் 12.50 மணிக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் எர்ணாகுளம்- பெங்களூரு வந்தே பாரத் சிறப்பு ரயில் எண் ( 0 6001)அன்று இரவு 10 மணிக்கு பெங்களூருவை சென்றடையும் .மறு மார்க்கமாக ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை வியாழக்கிழமை, சனிக்கிழமை மற்றும் திங்கள் கிழமைகளில் காலை 5 – 30 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் பெங்களூர் – எர்ணாகுளம் சிறப்பு வந்தே பாரத் ரயில் ( எண் 06 002)அன்று பிற்பகல் 2-20 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும் இந்த ரயில் திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.