சோலையாறு அணை பகுதியில் மண்சரிவில் சிக்கி பாட்டி,பேத்தி உயிரிழப்பு..

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை இடதுகரை முக்கு ரோடு அழகப்ப கோனார் காட்டேஜ் அருகே நள்ளிரவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி முத்து என்ற ராஜேஸ்வரி வயது 56 மற்றும் அவரது பேத்தி பத்தாவது படிக்கும் பள்ளி மாணவி ஜனப்பிரியா வயது 16 ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த துயரச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது..