33 பவுன் தங்க நகையுடன் 3 வடமாநில தொழிலாளர்கள் மாயம்..!

கோவை இடையர் வீதியில் வசிப்பவர் பீமால் அடக் (வயது 41) தங்கப் பட்டறை நடத்தி வருகிறார். இவரது நகை பட்டறையில் வேலை செய்து வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த பிஸ்வான் குர்ல், பிலாஸ் பிரமானிக், சுப்பிர மாதேடிக்கர் ஆகியோரிடம் 33.20 பவுன் தங்கம் கொடுத்து நகை செய்யுமாறு கூறியிருந்தார். இந்த நகைகளுடன் 3 பேரும் எங்கோ மாயமாகிவிட்டனர். அவர்களது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பீமால் அடக் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து 3 பேரை தேடி வருகிறார். ,