நொய்யல் ஆற்றில் மூழ்கி ஒருவர் பலி..

சிறுவாணி அணைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.. இதை யடுத்து நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. இந்த நிலையில் கோவை செல்வபுரம், எல்.ஐ.சி . ராஜூ நகரை சேர்ந்த காளிமுத்து (வயது 56)என்பவர் புட்டு விக்கி ரோட்டில் உள்ளஅணைக்கட்டு பகுதிக்கு சென்றார். ஆற்றில் இறங்கும் போது நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து பேரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது..