கோவை டாஸ்மாக் பாரில் கள்ள சந்தையில் மது விற்பனை- 3 பேர் கைது..!

கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் (கடை எண் 1887) பாரில் 24 மணி நேரமும் மது விற்பனை நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது .இதை ய டுத்து போத்தனூர் சப் இன்ஸ்பெக்டர்சுகுமாறன் திடீர்சோதனை நடத்தினார். அப்போது அங்கு மது பாட்டில்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து24 மணி நேரமும் அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாகபார் ஊழியர்கள்முத்துசாமி ( 43, ) காளீஸ்வரன் ( 21 ) ஜெயக்குமார் ( வயது 25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 133 மது பாட்டில்களும் மது விற்றபணம் ரூ 5,410 பறிமுதல் செய்யப்பட்டது.