திருமணம் செய்வதாக கூறி காவாளியிடம் ரூ.2 லட்சம் மோசடி- தில்லாலங்கடி பெண் கைது..!

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் ( வயது 57) காவலாளி. இவர் 2-வது திருமணம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்து பெண் தேடி வந்தார். அதை பார்த்த கோவை பொன்னையராஜபுரத்தை சேர்ந்த விஸ்வதர்ஷினி ( வயது 47) என்பவர் முத்துராமலிங்கத்தை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தானும் கணவரை பிரிந்து தன் மகனுடன் வாழ்வதாகவும், இரண்டாவது திருமணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார். இதை நம்பிய முத்துராமலிங்கம் விஸ்வ தர்ஷினியை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டனர். நேரிலும் சந்தித்து அன்பை வளர்த்துக் கொண்டனர். முத்துராமலிங்கத்திடம் விஷ்வ தர்ஷினி அடிக்கடி செலவுக்கு பணம் வாங்குவாராம். இந்த வகையில் ரூ 2 லட்சம் மோசடி செய்துள்ளார். இது குறித்துஆர். எஸ். புரம் போலீசில் முத்துராமலிங்கம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்கு பதிவு செய்து விஷ்வ தர்ஷினியை கைது செய்தார்..மேலும் விசாரணை நடந்து வருகிறது..