முகநூலில் சர்ச்சை தகவல் பரப்பிய 3 பேர் மீது வழக்குபதிவு..!

கோவையைச் சேர்ந்தவர்கள் உமர் பாரூக் .சிக்கந்தர் பாட்ஷா என்ற சிக்கி, அன்வர் உசேன் . இவர்கள் மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை முகநூலில் பரப்பினார்களாம். இது குறித்து கடைவீதி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் புகார் செய்தார்.கடைவீதி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி வழக்கு பதிவு செய்து 3 பேரை தேடி வருகிறார்..