கோவை கல்லூரி மாணவர் பணத்துடன் திடீர் மாயம் – கடத்தப்பட்டாரா..?

கோவை கவுண்டம்பாளையம் சரவணா நகர், வி.சி.பி. கார்டனை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். பில்டிங் கான்ட்ராக்டர். இவரது மகன் கீர்த்திவர்மன் (வயது 21) குனியமுத்தூர் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 6 – ந்தேதி பெற்றோரிடம் ரூ. 47ஆயிரம் வாங்கிக் கொண்டு தனது காரில் வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.எங்கோ மாயமாகிவிட்டார்.அவருக்கு யாரோ வாட்ஸ் அப்பில் மிரட்டல் மெசேஜ் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர் கடத்தப்பட்டாரா? அல்லது எங்கு சென்றார் ? என்று தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ஜெகதீஸ்வரன் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார் .இன்ஸ் பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.