கோவை வழக்கறிஞர்கள் நாளை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்.!!

கோவை வழக்கறிஞர்கள் சங்க செயற்குழு கூட்டம் சங்கத் தலைவர் தலைமையில் நேற்று நடந்தது . கூட்டத்தில் மறைந்த வழக்கறிஞர் எஸ் .உதயகுமார் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், வழக்கறிஞர்களின் பாதுகாப்பு சட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்ற கோரியும், கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் நாளை 8-ந்தேதி (வியாழக்கிழமை) ஒரு நாள் மட்டும் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாளை (வியாழக்கிழமை) வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்..