பேக்கரி மேற்கூரை உடைத்து பணம் கொள்ளை..!

கோவை உக்கடம், ஜி எம்.நகர், கோட்டைபுதூரை சேர்ந்தவர் மூசா . இவரது மகன் இர்பான் (வயது 22) இவர் உக்கடம் பைபாஸ் ரோட்டில் பேக்கரி நடத்தி வருகிறார் . நேற்று முன்தினம் இரவில் பேக்கரியை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார் .நேற்று காலையில் வந்து பார்த்த போது பேக்கரியின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த ரூ 12 ஆயிரத்தை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து இர்பான் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் பாமா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.