முதல்வர் ஸ்டாலின் நாளை கோவை வருகை.!!

கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு .க.ஸ்டாலின் நாளை காலை 11 மணிக்கு விமானம் மூலம் கோவை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது. அங்கிருந்து 11 – 10 மணிக்கு காரில் கோவை ரேஸ்கோர்ஸ் உள்ள அரசு கலைக் கல்லூரிக்கு செல்கிறார். அங்குள்ள மைதானத்தில் தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். 11 – 45 மணிக்கு புறப்பட்டு 11 -50 மணிக்கு உக்கடம் புதிய மேம்பாலத்தை திறந்து வைக்கிறார். பின் அங்கிருந்து 12-05 மணிக்கு காரில் கனியூர் செல்கிறார். அங்கு கலைஞர் திருவுருவ சிலையை திறந்து வைக்கிறார். மதியம் 12-45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 1 மணிக்கு கோவை விமான நிலையம் சென்றடைகிறார். முதலமைச்சரின் வருகையையொட்டி மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க தமிழ்நாடு சட்டம் -ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் இன்று மாலை கோவை வருகிறார்..