கடைக்குள் புகுந்து பணம் திருட்டு – மர்ம நபர்கள் கைவரிசை..!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவர் தினேஷ் குமார். இவர் நேற்று காலையில் கடையை திறந்து பார்த்தபோது கடையில் வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் கீழே சிதறிக்கிடந்தன. அங்கிருந்த ரூ. 80 ஆயிரத்தை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர். உடனே அவர் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒருவர் கடைக்குள் புகுந்து திருடி செல்வது தெரியவந்தது .இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் தினேஷ்குமார் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..