14 ஆண்டுகளாக தலைமறைவானவர்… தேடப்படும் குற்றவாளியாக கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் அறிவிப்பு..!

கோவை புதூரில் கடந்த 2001 ஆம் ஆண்டு ” டேட்டா ” நிறுவனம் நடத்தி ஆன்லைன் மூலம் முதலீடு பெற்று மோசடி செய்த வழக்கில் சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். ஜாமினில் விடுதலையான பிரபாகரன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் பேரூர் காவல் நிலையத்தில் பதிவு செய்த வழக்கில் பிரபாகரனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. பிரபாகரன் மீது கோவை திருச்சி, ஈரோடு, சேலம், மற்றும் பல்வேறு மாநிலங்களில் குற்ற வழக்குகள் உள்ளன. எனவே அவரைப் பற்றி தெரிந்தால் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..