ஓடும் பேருந்தில் அரசு டாக்டரிடம் நகை , பணம் திருட்டு – பெண் மீது புகார்..!

கோவை : சேலம் மாவட்டம், மறவனேரி, காந்தி நகரை சேர்ந்தவர் ராஜலட்சுமி ( வயது 30)இவர் பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் டாக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று பஸ்சில் தனது தாயாருடன் பொள்ளாச்சியில் இருந்து உக்கடம் பஸ் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார்.பின்னர் அங்கிருந்து டவுன் பஸ்சில் காந்திபுரம் வந்தார். காந்திபுரம் பஸ் நிலையம் வந்ததும் இவரது மனி பர்சை காணவில்லை. அதில் ரூ. 2,500 பணமும், 2கிராம் தங்க செயின், ஏ.டி.எம். கார்டு, ஐ.டி கார்டு, ஆகியவை இருந்தது..இதை யாரோ திருடி சென்று விட்டனர் . இது குறித்து டாக்டர் ராஜலட்சுமி காட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரில் பஸ்சில் தனது பக்கத்தில் இருந்து பயணம் செய்த பெங்களூரு, மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ராஜன் மனைவி முத்துலட்சுமி ( வயது 50) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். இவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..