திமுக பிரமுகர் கார் கண்ணாடி உடைப்பு..!

கோவை அருகே உள்ள கணுவாய், டீச்சர்ஸ் காலனி முதல் விதியைச் சேர்ந்தவர் செந்தில் ( வயது 46) கோவை மாவட்ட திமுக துணைச் செயலாளராக உள்ளார். நேற்று முன்தினம் இவரது காரை வீட்டின்முன் நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார்.அப்போது ஏதோ ஒரு சத்தம் கேட்டு செந்தில் வெளியே வந்தார். 2 ஆசாமிகள் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி விட்டு ஸ்கூட்டரில் தப்பிச் சென்றதை பார்த்தார். – இதுகுறித்து செந்தில் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிராங்கிளின்,சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து அந்த ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.