காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை..

கரூரை சேர்ந்தவர் பரமசிவம் இவரது மகள் சவுமியா ( வயது 28) இவர் கரூரில் உள்ள கல்லூரியில் பி. இ.படித்துவந்தார்.அதே கல்லூரியில் படித்த வினோத்குமார் என்பவருடன் சவுமியாவுக்கு காதல் ஏற்பட்டது. 26 .4 .2019 அன்று இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர்களின் எதிர்ப்பு மீறி திருமணம் செய்து கொண்டதால் சவுமியாவிடம் யாரும் குடும்பத்தினர் பேசுவதில்லை. இந்த நிலையில் இருவரும் கோவை ஒண்டிபுதூர், கண்ணன் நகரில் வசித்து வந்தனர். வினோத்குமார் தினமும் குடித்து விட்டு வந்து சவுமியாவிடம் தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த சவுமியா நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..