காதலை பெற்றோர்கள் கண்டித்ததால்… ஐ.டி.பெண் ஊழியர் எங்கோ மாயம்.!!

கோவை, பீளமேடு, கிரி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் சங்கீதா ( வயது 23) ஐ.டி .நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் .இவர் கேரளாவை சேர்ந்த அபிலேஷ் என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தாராம்..இதை அவரது தாயார் சுமதி கண்டித்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் தனது தாயாருக்கு செல்போனில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி விட்டு சங்கீதா எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து தாயார் சுமதி,பீளமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தமிழரசு வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.