மனைவிக்கு வரதட்சணை கொடுமை… கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு..!

கோவை பக்கம் உள்ள இருகூர், காமாட்சிபுரம், தாகூர் வீதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் . இவரது மகள் அனுபாமா ( வயது 28) இவருக்கும் ஒண்டிப்புதூர் கதிர் மில் மீனாட்சி அம்மன் நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் வெங்கடேஷ் (வயது 30) என்பவருக்கும் 22- 2 -20 24 அன்று திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு அவரது கணவர் விக்னேஷ் எந்த வேலைக்கும் செல்வதில்லை. இந்த நிலையில் கணவரும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து அனுபாமாவிடம் வரதட்சணை கேட்டு மிரட்டல் விடுத்தார்களாம். இதுகுறித்து கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அனுபாமா புகார் செய்தார் . இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ருக்மணி விசாரணை நடத்தி அனுபாமாவின் கணவர் விக்னேஷ், மாமனார் ஆறுமுகம், மாமியார் புஷ்பா, கொழுந்தனார் லோகேஷ் மற்றும் உறவினர்கள் சபிதா, கிருஷ்ணமூர்த்தி, புவனேஸ்வரி ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..