பாம்பு கடித்து வடமாநில பெண் பரிதாப சாவு..

ஒடிசாவை சேர்ந்தவர் ரத்னாக்கர் மஜி. இவரது மனைவி மன்டக்கினி மஜி (வயது 33) இவர் பேரூர், போஸ்டல் காலனி, குறிஞ்சி நகரில் குடும்பத்துடன் தங்கியிருந்து அங்குள்ள சோடா கம்பனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது ரோட்டில் கிடந்த பாம்பை தெரியாமல் மிதித்து விட்டார். இதனால் அந்த பாம்பு அவரது வலது காலில் கடித்தது. அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இறந்தார் .இது குறித்து அவரது கணவர் ரத்னகர் மஜ்ஜி பேரூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..