கோவை வியாபாரி வீட்டில் வெள்ளி பொருட்கள் திருட்டு – வடமாநில வாலிபர் 4 பேர் கைது..!

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள கெம்பனூர் மேற்கு வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல் ( வயது 46) கோழி தீவனம் வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 9 – ந் தேதி இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கன்னியாகுமரி சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார் . அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்தது. இதன் மதிப்பு ரூ 1 லட்சம் இருக்கும். இது குறித்து சக்திவேல் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்கு பதிவு செய்து மேற்கு வங்காளத்தை சேர்ந்த சமிம் புர்கத் (24) டிலு வர்லஸ்கா (26) பர்விகி (23) ரிங்கு ஷாக் 25) ஆகியோரை கைது செய்தார். இவர்களிடமிருந்து வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டது..