கோவை இன்ஜினியர், வியாபாரி வீட்டில் 23 பவுன் தங்க நகைகள், பணம் கொள்ளை – மர்ம நபர்கள் கைவரிசை..!

கோவை காந்திமா நகர் பகுதியில் வசிப்பவர் மகேஷ் ( வயது 32 )டேட்டா இன்ஜினியர். இவர் கடந்த 10 -ந்தேதி வீட்டை பூட்டி விட்டு தனது பாட்டி இறந்ததற்காக குடும்பத்துடன் நெல்லை மாவட்டம் சென்றிருந்தார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது . உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 17 பவுன் தங்க நகைகள், 30 கிராம் வெள்ளி பொருட்கள், பணம் ரூ4 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர் . இது குறித்து மகேஷ் சரவணம் பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்…

இதே போல விளாங்குறிச்சி திருநகரில் வசிப்பவர் செந்தில் ( வயது 45) மரக்கதவு வியாபாரம் செய்து வருகிறார். இவரும் கடந்த 10 -ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு கேரள மாநிலத்தில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலுக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது . பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகைகள் 40 கிராம் வெள்ளி சாமான்களை காணவில்லை .யாரோ திருடி சென்றுவிட்டனர் .இது குறித்து செந்தில் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.