கோவை மேற்கு மண்டல புதிய போலீஸ் ஐ.ஜி.யாக செந்தில் குமார் இன்று பொறுப்பேற்பு.!!

கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக பணிபுரிந்து வந்தவர் பவானிஸ்வரி. இவர் சென்னைக்கு மாறுதலாகி சென்றுள்ளார். இவருக்கு பதிலாக கோவை மேற்கு மண்டல புதிய போலீஸ் ஐ .ஜி.யாக செந்தில்குமார் நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன் சென்னையில் பணியாற்றினார். இவர் 2014 -ஆம் ஆண்டுகோவை மாநகர போலீஸ் துணை கமிஷனரகவும், பிறகு நீலகிரி மாவட்ட எஸ்பி யாகவும் பணியாற்றி உள்ளார். இவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 7 மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மேற்கு மண்டலத்தில் சட்டம் – ஒழுங்கு பேணி பாதுகாக்கப்படும். போதைப்பொருள் முழுமையாக ஒழிக்கப்படும். ரவுடிகள் அறவே இல்லாத அடக்கப்படுவார்கள். ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.