நீலகிரியின் புதிய காவல் கண்காணிப்பாளராக என்.எஸ் நிஷா இன்று பொறுப்பேற்பு.!!

நீலகிரி மாவட்ட உதகை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார், அவருக்கு நீலகிரி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சௌந்தர்ராஜன் அவர்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்ட காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். புதியதாக வருகை புரிந்த காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா அவர்களை மாவட்ட காவல்துறை அதிகாரிகள், காவல்துறை அலுவலர்கள் சிறப்பு வரவேற்பு தந்து வரவேற்றனர்,