சம்பள பணம் காணாமல் போனதால் பனியன் கம்பெனி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை..

புதுக்கோட்டை மாவட்டம் ,அரசகுளம், பாரதிநகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் விக்னேஷ் (வயது 33)திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். கடந்த 14ஆம் தேதி தனது சம்பள பணம் ரூ10 ஆயிரத்தை  தொலைத்து விட்டார். இதனால் மனமுடைந்த விக்னேஷ் கருமத்தம்பட்டி, சென்னி ஆண்டவர் கோவில் வீதியில் அவர் தங்கி இருந்த அறையில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது தம்பி அரவிந்த் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர்செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..