கேரள லாட்டரி டிக்கெட் விற்ற காவலாளி கைது.!!

கோவை ஆர். எஸ். புரம், சிறப்பு சப் இன்ஸ்பெக்டரள் நாகராஜ் ,கனகராஜ் ஆகியோர் நேற்று மாலை ஆர். எஸ் .புரம். காந்தி பார்க், பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் . அப்போது அங்குள்ள பஸ் ஸ்டாப் அருகே ஒருவர் நின்று கொண்டு கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக அவரை கைது செய்தனர் . விசாரணையில் அவர் கோவை எம். என். ஜி வீதியைச் சேர்ந்த வேல்முருகன் ( வயது 45 ) என்பது தெரிய வந்தது. இவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரிடமிருந்து 22 லாட்டரி டிக்கெட், இருசக்கர வாகனம், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.