பைக்கில் சென்ற வாலிபரின் கழுத்தில் தங்க செயின் பறிப்பு – கொள்ளையன் கைது..!

செங்குன்றம் அடுத்த சோழவரம் ஆத்தூர் மேம்பாலம் சர்வீஸ் சாலையில் சஞ்சய் வயது 19. தகப்பனார் பெயர் சிவா. கமரபாளையம் காலனி சோழவரம் இவர் தனது மோட்டார் சைக்கிளில் இரவு 7.30 மணி அளவில் கடைவீதிக்கு வந்து கொண்டிருந்தாராம். அப்போது பின்னால் மின்னல் வேகத்தில் வேகமாக வந்த கொள்ளையன் சஞ்சய் கழுத்தில் இருந்த 6 கிராம் தங்கச் சங்கிலியை லபக்கென்று பருத்திச் சென்று விட்டானாம். இது குறித்து சஞ்சய் காவல் நிலையத்தில் தேம்பித் தேம்பி அழுதுகொண்டு சோழவரம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமாரிடம் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதிந்து
மோட்டார் சைக்கிளில் வந்து தங்க நகைகளை பறிக்கும் ஸ்டாலின் வயது 24.  தகப்பனார் பெயர் ராமன். அம்பேத்கர் தெரு சென்னை. என்பவனை கைது செய்து அவனிடத்தில் இருந்த 6 கிராம் தங்க சங்கிலியை இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் பறிமுதல் செய்தார். வழக்குப் பதிவு செய்து கேடி ஸ்டாலினை கைது செய்தார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்..