திருச்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி – அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்..!

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மற்றும் பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த குடிநீரின் தரத்தினை பரிசோதனை செய்யும் அரங்கினையும் பார்வையிட்டார். நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமார் மேயர் மு அன்பழகன் மாநகராட்சி ஆணையர் சரவணன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைமை பொறியாளர் எழிலரசன் நிர்வாக பொறியாளர்கள் எஸ் நாக ஆனந்த் பன்னீர்செல்வம் உமா உள்ளிட்ட அலுவலர்கள் பணியாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.