தொழிலாளியை கத்தியால் குத்தி பணம் பறிப்பு – 3 கொள்ளையர்கள் கைது..!

கோவை சிங்காநல்லூர், உப்பிலிபாளையம், ராமானுஜம் நகரை சேர்ந்தவர் அசோக் குமார். இவரது மகன் அஜய் குமார் (வயது 24) லேத் தொழிலாளி. இவர் உப்பிலிபாளையம் இந்திரா கார்டன் ,சிவா நகர் பகுதியில் பொறித்த மீன் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்தார் . அப்போது அங்கு வந்த 4 பேர் இவரை வழிமறித்து பணம் கேட்டனர் .கொடுக்க மறுத்ததால், கத்தியால் குத்தியும் கைகளில் கடித்தும் அவரது சட்டை பையில் இருந்த 500 ரூபாயை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர் .இது குறித்து சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வினோத்குமார் வழக்கு பதிவு செய்து சிங்காநல்லூர் ,மசக்காளிபாளையத்தை சேர்ந்த கீர்த்தி பாலாஜி (வயது 19) பிரவீன் குமார் (வயது 18)நீலி கோணாம்பாளையம் கீர்த்தி வாசன் ( வயது 17) ஆகியோரை கைது செய்தார் . சூர்யா என்ற மின்னல் சூர்யா தப்பி ஓடிவிட்டார் . இவரை தேடி வருகிறார்கள்.