பாலத்தில் ஸ்கூட்டர் மோதி பேரூராட்சி தி.மு.க செயலாளர் பலி..

கோவை , ஆலந்துறை அருகே உள்ள கிளியாக்கவுண்டன் பாளையம், தபால் அலுவலக வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45) இவர் ஆலாந்துறை பேரூராட்சி 1வது வார்டு தி.மு.க. செயலாளராக பதவி வகித்து வந்தார். மேலும் வெங்காய வியாபாரமும் செய்து வருகிறார். நேற்று இவர் வழக்கம் போல வெங்காயம் விற்பனைக்காக கோவைக்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்ல தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். உரிப்பள்ளம்புதூர் அருகே வரும்போது ஒருவர் திடீரென சிறுவாணி சாலையை கடக்க முயன்ற ஒருவர் மீது மோதாமல் இருக்க இரு சக்கர வாகனத்தை இடது புறமாக திருப்ப முயன்றார். அப்போது அவர மீது இடது காலில் மோதி சாலையின் ஓரத்தில் இருந்த கான்கிரீட் பாலத்தின் மீது ஸ்கூட்டர் வேகமாக மோதியது.. இதில் ஸ்கூட்டர் ஓட்டி வந்த செந்தில்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் இறந்தார். சாலையை கடக்க முயன்றவரின் பெயர் விலாசம் தெரியவில்லை. அவருக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டு மயக்கமடைந்துவிட்டார். அவர் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஆலாந்துறை சப் இன்ஸ்பெக்டர் கவியரசு சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்..