திருச்சி மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.!!

திருச்சி மாநகராட்சி சுகாதார சீர்கேட்டை கண்டித்தும் குடி தண்ணீர் கலப்படம் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஆமை வேகத்தில் செய்து வரும் திருச்சி மாநகராட்சி மற்றும் திமுக அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் டி ரத்தினவேல் முன்னிலை வகித்தார் ஆர்ப்பாட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் மோகன் திருச்சி மாநகராட்சி சீர்கேட்டை கண்டித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் அரவிந்தன் மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக் கழக நிர்வாகிகள் மற்றும் பகுதிச் செயலாளர்கள் மகளிர் அணியினர் வட்டச் செயலாளர்கள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு திருச்சி மாநகராட்சி சீர்கேட்டை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.