திருவனந்தபுரத்தில் தாயுடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு போன 13 வயது சிறுமி விசாகப்பட்டினத்தில் மீட்பு.!!

விசாகப்பட்டினம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தஷ்மிதமாஸ் வயது 13. இவள் தனது தாயுடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள். திருவனந்தபுரத்தில் ரயில் ஏறி நாகர்கோயில் ரயில் நிலையம் வந்து அடைந்தாள். மகளைக் காணவில்லை என்று தந்தை அன்வர் உசைன் திருவனந்தபுரம் ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அந்த ரயிலில் சிறுமிக்கு தண்ணீர் தாகம் எடுக்கவே பிளாட்பார்மில் தண்ணீர் பாட்டிலில் குடிநீர் பிடித்தாள். அதே ரயிலில் ஏறி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தாள். இதற்கிடையில் இந்த சிறுமியை போல் தோற்றம் கொண்ட மற்றொரு சிறுமியை நாகர்கோவில் ஆட்டோ டிரைவர் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து காண்பித்தார். பல்வேறு கட்ட கால விசாரணைக்கு பின் வேறொரு சிறுமியென போலீசார் கண்டுபிடித்தனர். இந்நிலையில் காணாமல் போன சிறுமி விசாகப்பட்டினத்தில் மீட்கப்பட்டதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர்..