உதகையில் திமுகவின் கழக கூட்டத்தில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பங்கேற்பு..!

நீலகிரி மாவட்ட கழக கூட்டம் உதகை ஒக்கலிகர் திருமண மண்டபத்தில் மாவட்ட அவை தலைவர் போஜன் அவர்கள் தலைமையில், தேர்தல் பணி செயலாளர், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது,
நிகழ்ச்சி துவக்கமாக மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அனைவரையும் வரவேற்றார், கழக துணை பொது செயலாளர்- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா B.Sc.,ML., அவர்கள் சிறப்புரையாற்றினார், கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தில் கழக முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடத்துவது குறித்தும், மாவட்டத்திலுள்ள கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது, நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் செயலாளர் ரவிக்குமார், மாவட்ட பொருளாளர் நாசரலி, தலைமை பொதுக்குழு உறுப்பின பெள்ளன், தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், உதகை நகர செயலாளர் ஜார்ஜ், உதகை குன்னூர் கூடலூர் நகர மன்ற தலைவர்கள், ஊராட்சி பேரூராட்சி தலைவர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், திமுக கழக நிர்வாகிகள், திரளாக கலந்து கொண்டனர், கூட்ட முடிவில் மேலூர் ஒன்றிய கழக செயலாளர் லாரன்ஸ் விழாவிற்கு வந்த அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சி நிறைவு பெற்றது,.