இருகூர் டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்றவர் ஸ்கூட்டர் மோதி பரிதாப பலி..

கோவை அருகே உள்ள இருகூர் ,செல்வ விநாயகர் வீதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் தனபால் (வயது 46) இவர் நேற்று ஒண்டிப்புதூர், எஸ் .ஐ.எச்.எஸ் காலனி ,இருகூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஸ்கூட்டர் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்தார். இவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.. வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக ஸ்கூட்டர் ஒட்டி வந்த எஸ்.ஐ. எச். எஸ்.காலனி பகுதியைச் சேர்ந்த கனகராஜ் மகன் ஹரிஷ் (வயது 18) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..