ஓடும் அரசு பேருந்தில் மூதாட்டியின் செயின் திருட்டு..!!

நீலகிரி மாவட்டம், குன்னூரை சேர்ந்தவர் மூர்த்தி .இவரது மனைவி லீலா (வயது 72) இவர் கடந்த 21-ம்தேதி கோவை விளாங்குறிச்சி உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று ஊருக்கு திரும்புவதற்காக பீளமேடு ஹோப் காலேஜ் பஸ் ஸ்டாப்பில் இருந்து காந்திபுரத்துக்கு அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார் . காந்திபுரம் பஸ் நிலையம் சென்றதும் பஸ்சை விட்டு இறங்கினார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை காணவில்லை. யாரோ ஓடும் பஸ்சில் திருடி விட்டனர். இதுகுறித்துகாட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..