பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் எஸ்.பி. கார்த்திகேயன் திடீர் ஆய்வு..!

கோவை மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றிருப்பவர் டாக்டர். கே. கார்த்திகேயன். இவர் பொறுப்பேற்ற பிறகு மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் சென்று திடீர் ஆய்வு செய்து வருகிறார்.போதைப் பொருள் கடத்தல், ரவுடிகள் அட்டகாசம் ஆகியவற்றை தீவிரமாக கண்காணித்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று பொள்ளாச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றார்.அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சிகிச்சை பெறுபவர்களிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மருத்துவமனை தலைமை டாக்டரிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாட்டிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கலந்து ஆலோசித்தார். மருத்துவமனை முழுவதும் சுற்றிப் பார்த்தார். சில இடங்களில் விளக்குகள் பொருத்துவதற்கும் ஆலோசனை வழங்கினார்.இரவு நேரங்களில் காவல்துறை “ப்ட்ரோல்” வாகனங்கள் மருத்துவமனை வளாகத்துக்குள் சென்று வருவதற்கு உத்தரவிட்டார்.