திருச்சியில் குழந்தையின் வயிற்றில் 5 ரூபாய் நாணயத்தை அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை!!

திருச்சி தொட்டியம் வட்டம் மணமேடு கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு மகள் கிருத்திகா அங்கு உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய கிருத்திகா மாலை தின்பண்டம் வாங்க தந்தை திருநாவுக்கரசிடம் ஐந்து ரூபாய் வாங்கிக்கொண்டு கடைக்குச் சென்றுள்ளார்.
காசை வாயில் வைத்துக் கொண்டு சென்றவர் அதனைத் தவறுதலாக விழுங்கியுள்ளார். உடனே இது குறித்து தந்தையிடம் கூற அவர் முசிறி அரசு மருத்துவமனைக்கு கிருத்திகாவை கூட்டிச் சென்றுள்ளார். முதலுதவி சிகிச்சைக்கு பின் சிறுமி கிருத்திகா திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
சிறுமி மூச்சுத் திணறலால்சிரமப்பட்டுள்ளார். அவரை சர்ஜிகல் காஸ்ட்ரோ என்ட்ராலஜி துணைத் தலைவர் கண்ணன் தலைமையில் மருத்துவர்கள் கார்த்திகேயன் ராஜசேகர் சங்கர் அடங்கிய குழுவினர் உணவுக் குழாயில் அடைபட்டு கிடந்த ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியே எடுத்தனர். தற்போது சிறுமி நலமாக உள்ளார் மருத்துவக் குழுவினருக்கு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர். குழந்தையின் வயிற்றில் இருந்த நாணயத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய திருச்சி அரசு மருத்துவர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.