கோவை போலீசாருக்கு “ட்ரோன்” கண்காணிப்பு விழிப்புணர்வு பயிற்சி..!

கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் “ட்ரோன் “இயக்குவது குறித்த கண்காணிப்பு விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் நடந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் இது நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் “ட்ரோன்” காமிரா இயக்குவது , கண்காணிப்பது  எப்படி? அதற்கான விதிமுறைகள் என்ன? என்பது குறித்து விளக்கி கூறப்பட்டது. இதில் உதவி கமிஷனர் மகேஸ்வரன், இன்ஸ்பெக்டர் கனக சபாபதி மற்றும் ட்ரோன் பயிற்சியாளர்கள்,போலீசார் பங்கேற்றனர்..