தாராபுரம் புதிய டி.எஸ்.பி.யாக சுரேஷ்குமார் பொறுப்பேற்பு..!

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் டி.எஸ்.பி. யாக பணிபுரிந்து வந்தவர் கலையரசன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி டி.எஸ்.பி . யாக மாறுதலாகி சென்றுள்ளார். இவருக்கு பதிலாக தாராபுரம் சப் டிவிஷன் புதிய போலீஸ் துணை சூப்பிரண்டாக சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன் கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் உதவி கமிஷனராக பணியாற்றினார். புதிய டி.எஸ்.பி சுரேஷ்குமாருக்கு போலீஸ் அதிகாரிகளும், சமூக சேவை அமைப்புகளும், பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்தனர்..