சென்னை அருகே விண்ணில் வெற்றிகரமாக சீறி பாய்ந்த ரூமி ராக்கெட்..!

சென்னை: தனியாா் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் வடிவமைத்த இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டுக்கான ராக்கெட் மூலம் 3 செயற்கைக்கோள்களுடன் நடமாடும் ஏவுதளம் மூலமாக கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள திருவிடந்தை கிராமத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.

தமிழகத்தை சேர்ந்த ஸ்பேஸ் ஜோன் இந்தியா மற்றும் மாா்ட்டின் குழுமங்கள் சாா்பில் மறுபயன்பாட்டுக்கான ‘மிஷன் ரூமி – 2024’ திட்டத்தின் மூலம் ‘ரூமி 1’ என்ற ராக்கெட்டை உருவாக்கியது. இதற்கான அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிலையில், ‘மிஷன் ரூமி – 2024’ என்ற இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே தாயரிக்கப்பட்ட முதல் மறுபயன்பாட்டுக்கான ‘ரூமி 1’ ராக்கெட் 3 கியூப் செயற்கைக்கோள்களுடன் மொபைல் லாஞ்சரைப் பயன்படுத்தி நடமாடும் ஏவுதளம் மூலமாக கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள திருவிடந்தை கிராமத்திலிருந்து சனிக்கிழமை(ஆக 24) விண்ணில் ஏவப்பட்டது.கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள திருவிடந்தை கிராமத்திலிருந்து விண்ணில் ஏவ தயாராகும் ‘ரூமி 1’ ராக்கெட்

3.50 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட், வானில் 80 கி.மீ உயரத்தில் பறக்கக்கூடியது.

இதில் காஸ்மிக் கதிா்வீச்சு, புற ஊதா கதிா்வீச்சு, காற்றின் தரம், வளிமண்டல மாற்றங்களைக் கண்காணிக்கவும், அவை தொடா்பான தரவுகளை சேகரிப்பதற்காக 3 கியூப் செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. அந்த ராக்கெட்டில் நவீன தொழில்நுட்பத்திலான திரவ ஆக்சிஜன் மற்றும் திட எரிபொருள் உந்து சக்தி பயன்படுத்தப்பட்டுள்ளது. பாராசூட் டிப்ளோயர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அதன் செயல்திறனை மேம்படுத்துவதுடன் செயல்பாட்டு செலவுகளையும் வெகுவாகக் குறைக்கிறது. அதிா்வலைகள், ஓசோன் அளவுகள், காற்றின் நச்சுத் தன்மை, வளிமண்டல நிலைகளை அறிந்து கொள்வதற்காக 50 சிறிய ஆய்வுக் கருவிகளும் அனுப்பப்பட்டு உள்ளன.இவை சுற்றுச்சூழல் குறித்த புரிதலை மேலும் மேம்படுத்த உதவும். திட்டமிட்ட பாதையில் அவற்றை நிலைநிறுத்திய பிறகு ‘ரூமி 1’ ராக்கெட் பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு வந்து சேரும். இந்தச் செயல் திட்டமானது சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது. விண்வெளி ஆய்வில் புதிய புரட்சிக்கான தொடக்கமாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.