நீ எனக்கு எம்மாத்திரம்…நீ எஃப்.ஐ.ஆர். போடு என்னத்தையாவது போடு… நீ என்ன திமுகவின் ஐடி விங்கா… திருச்சி எஸ்பியை கலாய்த்த சீமான்.!!

செய்தியாளர்களிடம் பேசிய சீமான் என் மீது 138 வழக்குகள் இருக்கு. அதை அதிகமாக்கி என் மீது 200 வழக்கு போட அவர் முயற்சி பண்றாரு. சீமான் டபுள் செஞ்சுரி அடிச்சான்னு வரலாறுல வரணுமில்ல. நீங்க ஐபிஎஸ்-சா இயங்கணும். திமுகவின் ஐ.டி.விங்குல வேலை செய்யக் கூடாது. நான் பாக்காத வழக்கா நீ அதிகாரத்துல ஒரு புள்ளி இந்த அதிகாரத்தையே எதிர்த்து நான் சண்டை செஞ்சுக்கிட்டிருக்கேன். இந்திய ஒன்றிய அரசு, இந்த மாநில அரசு எல்லாத்தையும் எதிர்த்து சண்டை செஞ்சுக்கிட்டிருக்கேன். நீ எனக்கு எம்மாத்திரம் ஓரமா நின்னு விளையாடிட்டு போகணும். நீ எஃப்.ஐ.ஆர். போடு என்னத்தையாவது போடு. என் வீட்டுல ஐந்தாறு குப்பைக் கூடை இருக்கு. கிழித்துப் போட்டுட்டு போயிட்டே இருப்பேன் என்று பதிலளித்துள்ளார் சீமான். சீமானின் இந்த பேச்சு காவல்துறை வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பாய் பேசப்படுகிறது..